Tuesday, September 18, 2018

Sanatana Dharmam is Great Eternal wisdom



*புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.*

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.
புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது....

www.supremeholisticinstitute.com

Sunday, September 16, 2018

அகத்தியர் அருளிய மந்திரம்.

அகத்தியா்அருளிய உடல்நோய்கள்அனைத்தையும்  முற்றிலும் நீக்கும்இம்மந்திரத்தினை  ஜெபித்து நோய்களினின்றும்   விடுதலைப்பெற்று  மகிழ்வுடன்வாழ்வோமே.......

கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து

ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது

“ஓம் கிலி அங் உங்”

என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன்

ஓம்கிலி அங்உங்

கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்208
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
www.supremeholisticinstitute.com

நூறு வயது வரை இளமையாக வாழ.

100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் எப்படி தெரியுமா ?

காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி. 90 வயதான மிடுக்கான இன்னும் பலம் பெற்ற ஒரு முதியவ்ர் கூறிய ரகசியம் இது.

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே …

என சித்தர்கள் இதனைப் பற்றி பாடியிருக்கிறார்கள். இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. ஆனால் அவற்றை உண்ணும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவ்ற்றிலும் விஷத்தன்மை உண்டது. நீங்கள் அதனை எந்த நேரத்தில் எப்படி நீங்கள் சாப்பிட வேண்டும் என்று மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி :

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

இஞ்சி உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

சுக்கு :

சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும்.

சுக்கு உண்ணும் முறை :

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன்

கடுக்காய் :

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

கடுக்காய் உண்ணும் முறை :

இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும்.மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி.

www.supremeholisticinstitute.com

ஒரே மருந்து அனைத்து நோய்களுக்கும்.

ஒரு நோய்க்கே மருந்து சொன்னாலே மகிழ்ச்சியடையும், ஒரே மருந்தில் பல நோய்களுக்கு தீர்வாகும் மருந்து இருந்தால் எப்படி இருக்கும். அதுபோன்ற, ஒரு மருந்தைப்பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.
* வெந்தயம். – 250gm
* ஓமம் – 100gm
* கருஞ்சீரகம் – 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
1. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
4. இருதயம் சீராக இயங்குகிறது.
5. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
6. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
7. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
8. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
9. கண் பார்வை தெளிவடைகிறது.
10. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
11. மலச்சிக்கல் நீங்குகிறது.
12. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
13. பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
14. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
15. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
16. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
17. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.
www.supremeholisticinstitute.com

Sunday, September 9, 2018

அது சிவகுரு வாசியோகம்

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?

நாம் வெண்மையான துணியைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே நடந்து போகின்றோம். எங்கேயோ பட்ட தூசி அது காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது பட்டு அழுக்காகின்றது.

மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதை உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் போது காற்றுக்குள் நெடி கலந்ததாகப் பரவி வரும். அந்தக் காற்றை நாம் சுவாசித்தால் “நச்... நச்...” என்று தும்முவோம்.

ஒரு இடத்தில் நல்ல வாசனையான பொருள்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். சந்தனமோ மற்ற பொருள்களிலிருந்து ஆவியின் அலைகள் வெளிப்பட்டுக் காற்றிலே மிதந்து வரும் அந்தப் பாதையில் ஒருவர் நடந்து சென்றால் அதைச் சுவாசிக்கப்படும் பொழுது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே பாதையில் வரப்படும் போது எனக்கு எப்படியோ இருந்தது. கப...கப... என்று இருந்தது. முதுகுப் பக்கமும் எரிச்சலாக இருந்தது என்பார்.

ஆனால் முதலில் வந்தவரோ இல்லை… அப்படி இருக்காது.. நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்.. எனக்கு ஒன்றும் இல்லையே…! நல்ல வாசனை தான் வந்தது என்பார்.

இது எல்லாம் ஏனென்றால் நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றது. அதைச் சுவாசிக்கும் பொழுது அதற்கொப்ப நம் சுவாசத்திலும் கலந்து நம்மையும் இயக்கத்தான் செய்யும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதை போலத் தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வியாபாரத்தில் நல்ல இலாபத்தைப் பெருக்கி விடலாம் என்று எண்ணுவோம்.

ஆனால் கடைக்கு வரும் ஒரு சிலர் வீட்டிலே தன் குடும்பத்தில் ஏற்பட்ட துன்பமான எண்ணத்துடன் வருவார்கள். அவர்களுடைய பிழைப்புக்காக வேண்டி எப்படியும் சாமான் வாங்கித் தான் ஆக வேண்டும்.

கஷ்டத்துடன் வரப்படும் போது நம்மிடம் வந்து இந்த அரிசி என்ன விலைங்க...? பருப்பு என்ன விலைங்க...!” என்று கேட்கின்றார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி அவர்கள் சொல்லும் போது நமக்குச் சரியாகக் (விவரம்) கேட்காது. அப்புறம் நாம் என்னய்யா...! கேட்கின்றீர்கள்....? என்று அழுத்திக் கேட்க வேண்டும்.

இந்த அரிசி தான் என்ன விலைய்யா...? என்று அவரும் அழுத்தமாகக் கேட்பார். அப்போது வீட்டிலே ஏற்பட்ட கஷ்டத்தால் கஷ்டமான உணர்வுகள் அவருக்குள் விளைந்தது நம்மிடம் வந்து கேட்கும் போது
1.அதே கஷ்டமான உணர்வுகள் நமக்குள் பட்டு
2.அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள்ளும் சேர்கின்றது.
3.ஆக ஒருவருக்கு ஒருவர் நாம் பிரிந்து செல்வதில்லை.
4.(அவர் கஷ்டத்ததைச் சந்தித்து துன்பப்படுகின்றார்... ஆனால் நாம் அந்தத் துன்பப்படுவோர் உணர்வைச் சுவாசித்துத் துன்பத்தை நமக்குள் விளைய வைக்கின்றோம்...!) முக்கியமானது

விண்ணிலே 27 நட்சத்திரங்களும் வானவீதியில் இருந்து வெளிப்படும் அந்த மற்ற விஷத்தின் தன்மைகளை முறித்து நாம் பிரபஞ்சத்திற்குள் அணுக்களானாலும் அந்த வட்டப் பாதையில் போகும் கோள் எதுவோ அது இழுத்து தன் உணர்வுடன் சேர்க்கின்றது.

உதாரணமாக சனிக் கோள் அந்தச் சக்திகளைப் பெற்று அதிலிருந்து வரும் உணர்வின் தன்மை நம் பூமிக்குள் வந்தால் பெரும் மழையாகப் பெய்கின்றது.

ஆனால் சனிக்கோளில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வுகள் நிலையை மற்ற கோள்களில் அதாவது புதன் கோளில் மோதும்போது வெடிப்பின் தன்மை அடைகின்றது.

நெருப்பின் மேல் நீரை ஊற்றினால் அது எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போல அடைகின்றது. இதைப்போல ஒவ்வொரு கோளிலும் சனிக் கோளின் தன்மைகள் படும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.

ஏனென்றால் புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அந்த வெப்பத் தணல்களில் நீரின் சத்து பட்டவுடனே வெடிப்பின் தன்மை வரும்.

சில பாறைகளிலே நீரின் தன்மை அது படும் போது அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். ஆக மற்ற கோள்களினுடைய நிலைகளில் சனிக்கோளின் தன்மைகள் பட்டால் அது எதிர்த்து அந்த நீரின் தன்மையை மீண்டும் வெப்ப அலைகளாக மாற்றி விடும்.

நீரைக் கொதிக்க வைக்கும் போது நீரின் சத்து மாறி ஆவியாக மாறுகின்றது. இதைப்போல தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.
1.இதைப் போன்று தான் நமக்குள்ளும்
2.ஒவ்வொரு விதமான குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது எதிர் நிலையாகும்.

நாம் வியாபராம் நன்றாக இருக்கிறது என்று எண்ணி உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்போம். ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் வேதனையுடன் நம்மிடம் வந்து அவரின் சங்கடத்தை எல்லாம் நம்மிடம் சொல்லிப் பேசிக் கொண்டிருந்த பின் அவருக்கு வேண்டிய சரக்கை நாம் எடுத்துக் கொடுத்தால் போதும்.

சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். உடலில் என்னமோ மாதிரி இருக்கின்றது. கிறு…கிறு…! என்று வருவது போல இருக்கின்றது. தும்மல் வருவது போல இருக்கிறது. உடலில் பளீர்…பளீர்..! என்று குத்துவது போல இருக்கிறது என்று சொல்வீர்கள்.

இந்த மாதிரி இருந்தது என்றால் அடுத்தாற்போல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். வந்தவர் இதற்கு முன்னாடி எப்படி வந்தார்…? அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்படி இருக்கின்றார் என்று பாருங்கள். அப்போது அவர்கள் குடும்பத்தில் இந்த கஷ்டமான நிலை இருந்திருக்கும்.

வியாபார நிலைகளில் முதலில் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய பேச்சின் நிலைகளைக் கேட்டுணர்ந்ததனால் நம்மை அறியாமல் உடலில் இத்தனை மாற்றங்களும் வந்து விடுகின்றது. ஏனென்றால்
1.நம் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் எதுவும் தனித்து வாழ்வதில்லை.
2.ஒன்றின் தன்மை ஒன்றிற்குள் அது கலந்து ஒன்றின் சக்தியை ஒன்று எடுத்துத்தான்
3.எல்லாமே இணைந்த நிலைகளில் சுழன்று கொண்டு வாழ்கின்றது.

அதைப் போன்று தான் நாம் மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது இத்தகைய நிலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
1.நேற்று இருந்த நிலை இன்று இல்லை…!
2.நேற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்று துன்பப்படுவோருடைய நிலைகளைக் கேட்டால் நம் மகிழ்ச்சி காணாது போய்விடும்.

உதாரணமாக முன்னாடி ராஜீவ் காந்தியை வெடி குண்டு வைத்துக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் சாதாராண நிலைகள் எல்லாம் மாறி எல்லாருக்கும் பதட்டங்களும் பயமும் பீதியும் ஏற்பட்டது.

அப்பொழுது ரோட்டில் போவதற்கே முடியாதபடி பய உணர்வுகள் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் அதை வெளிப்படுத்தும் போது மனிதருக்குள் சஞ்சலமும் பயமும் அதிகமாக ஏற்பட்டது.

இந்த மாதிரி உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நம் நல்ல குணங்களுடன் சேர்த்து ஒவ்வொரு நொடியிலேயும் விஷத் தன்மைகள் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள்.

நமது நண்பர் என்று மகிழ்ச்சியாக நாம் சந்திக்கின்றோம். ஆனால் அவரோ மற்றொரு இடத்தில் வெறுப்பாக வேதனையான சொல்களைக் கேட்டுவிட்டு இங்கே வருகின்றார்.

அவருடன் கலந்த அந்தச் சத்து… நண்பர் என்று பாசத்தோடு நாம் கலந்து உறவாடப்படும் போது அவர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வு நம் உடலிலே கலந்து விடுகிறது.
1.அவர் உடலில் அது அதிகமாக இருந்தாலும் அவர் உடலுக்குள் கலந்தது
2.இந்தப் பாசத்துடன் கலந்து நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இப்படி நமது வாழ்க்கையில் அடிக்கடி வந்து விடுகின்றது.

ஆனாலும் உயர்ந்த ஆறாவது அறிவு கொண்ட நாம் எத்தகைய பொருளானாலும் அதைச் சமைத்துச் சுவையாக்கி உணவாக உட்கொள்ளத் தெரிந்தவர்கள்…!
1.கசப்பையும் நாம் சுவை கொண்டு தான் மாற்றுகின்றோம்.
2.காரத்தையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்
3.காரலையும் புளிப்பையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்.

காய்கறிகளைச் சுத்தப்படுத்தி அதை எப்படி அறுசுவையாகச் சமைக்கின்றோமோ இதைப்போல மனித வாழ்க்கையில் நாம் எல்லோருடன் பழகினாலும்
1.நம் ஆறாவது அறிவின் திறமை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நம் உடலுக்குள் செலுத்திச் செலுத்தி
3.வரக்கூடிய துன்பங்களையும் வேதனைகளையும் அதனின் விஷத்தின் தன்மையைக் குறைத்தே ஆக வேண்டும்.

Saturday, September 8, 2018

GREAT MIRACLE:

*வேல் மாறல் - உண்மை சம்பவம்.*

சின்மயா நகரை சேர்ந்த நடுத்தரக் குடும்பப் பெண் பாக்யலக்ஷ்மி (55). கணவர் திரு. சேது ராமன் (58).

எளிமையான கட்டுக் கோப்பான குடும்பம். கணவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று
கொண்டிருந்தார்கள்.

ஒரு காலை சமையல் அறையில் பிஸியாக இருந்த பாக்ய லக்ஷ்மி அவர்களுக்கு திடீரென்று தலை சுற்றியது. “அம்மா… நெஞ்சு வலிக்குதே…” நெஞ்சில் கை வைத்து ஹாலுக்கு வந்து ஃபேனை போட்டுவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துவிட, கணவரும் பிள்ளைகளும் அலறியடித்துக்
கொண்டு பாக்யலக்ஷ்மி அவர்களை மருத்துவ மனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டார் பாக்ய லக்ஷ்மி.
மருத்துவ மனைகளுக்கே உரிய PROCEDURES, TEST, SCANNING அனைத்தும் விறுவிறுவென நடந்தன.

“அம்மா… அம்மா…” என்று பிள்ளைகள் ஒரு பக்கம் ஐசியு அறைக்கு வெளியே அழுது அரற்றிக் கொண்டிருக்க, கணவர் செய்வது அறியாது திகைத்து நின்றார்.

“டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன சொல்லப் போகிறார்களோ? ஆண்டவ. உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை!” என்றால் போதும் என்று இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிந்தது. மாலை அனைத்து ரிப்போர்ட்டுகளும் வந்து சேர்ந்தன.

இதய நோய் பிரிவின் சீஃப் டாக்டரை சென்று பார்த்தபோது, அவர் மனைவிக்கு ஏற்பட்டது ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று தெரிவித்தார்.
இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோடிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப் படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வு எடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும்.

இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சார்… நாங்க ஆர்டினரி மிடில் கிளாஸ் ஃபாமிலி. எங்களால எவ்ளோ செலவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றோம். எப்படியாவது அவளை காப்பாத்துங்க டாக்டர்.”
“சார்… இங்கே அந்த FACILITIES இல்லை. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் பாக்கி இருக்கு. நாளைக்கு எடுத்து விடுகிறோம். அதை பார்த்த பிறகு என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிக்கலாம். நீங்க பணத்தை ரெடி பண்ணனுமேன்னு தான் இதை இப்போ சொன்னேன். எதுக்கும் நீங்க வேற ஏதாச்சும் பெரிய ஆஸ்பிடல் ட்ரை பண்ணுங்க. டிலே பண்ற ஒவ்வொரு மணி நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து” என்று கூறிவிட்டு போய்விட்டார்.

இவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் போன் செய்ய ஆரம்பித்தார்.

விஷயம் கேள்விப்பட்டு பாக்ய லக்ஷ்மியின் தோழி கீதா நங்க நல்லூரிலிருந்து  பார்க்க மருத்துவ மனைக்கு வந்தார்.

“என்னென்னமோ சொல்றாங்களே… பயமாயிருக்கு எனக்கு… என் பிள்ளைகளையும் ஹஸ்பெண்டையும் அனாதையா விட்டு விட்டு போய்டுவேன் போலிருக்கே கீதா….”

“நீ ஒன்னும் கவலைப் படாதே பாக்கி…. இதோ நான் ஒரு ஸ்லோகம் புஸ்தகம் தர்றேன் அதை சொல்லிண்டே இரு போறும்…. எல்லாம் சரியாயிடும்!” என்று கூறியபடி அன்னை பார்வதி தேவியிடம் முருகன் வேல் வாங்கும் *அலங்காரம்* *‘வேல்மாறல்’* என்னும் மஹா மந்த்ரத்தை தர, அதை ஆச்சரியத்தோடு வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார்.

கடலில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளிப்பவனுக்கு பிடித்துக்கொள்ள ஒரு கயிறு கிடைத்தால் அதை எப்படி கெட்டியாக பற்றிக்கொள்வானோ அதே போல பாக்ய லக்ஷ்மி அதை கெட்டியாக பற்றிக் கொண்டார்.

*வேல்மாறல்* ஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவர், 14 வது ஸ்லோகமாக வரும்,

*திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன் மலை* *விருத்தன்*
*என(து)* *உளத்தில்உறை* *கருத்தன் மயில் நடத்து* *குஹன் வேலே.*

*திரைக் கடலை உடைத்து நிறை புனற்கடிது குடித்(து) உடையும்*
*உடைப்(பு)அடைய* *அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்*  (14)
*வரிகளை படித்தவர்,*

என்ன நினைத்தோரோ ஏதோ ஒரு INTUITION ல் திரும்ப திரும்ப அதே வரிகளை படிக்க ஆரம்பித்தார்.

மேற்படி வரிகளை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டவர் அன்று முழுதும் திரும்ப திரும்ப எண்ணற்ற முறைகள் சொல்லியபடி இருந்தார்.

மறுநாள் காலை பாக்கி இருந்த ஒரே டெஸ்ட் அதையும் முடித்துவிட்டு, மாலை அதன் ரிசல்ட்டு வரக்காத்திருந்த போது, சீப் டாக்டர் உடனடியாக அழைக்க திரு. சேதுராமன் உடனே அவர் அறைக்கு விரைந்தார்.

“மிஸ்டர். சேதுராமன், WHAT A MIRACLE IS THIS! உங்க மனைவியோட இதயம் இப்போ ரொம்ப நார்மலா ஹெல்தியா இருக்கு. அடைப்பு இருந்ததுக்கான சுவடே தெரியலே. ஒரே நாள்ல என்ன நடந்தது எப்படி இது நடந்ததுன்னு புரியலே. லேப்ல கூட ஒரு தரம் போய் ரெபர் பண்ணினேன். இ.சி.ஜி. கூட இன்னொரு முறை எடுத்துப் பார்த்தோம்.

NO NEED FOR ANY SURGERY. REALLY IT IS A MEDICAL MIRACLE. WHAT HAS HAPPENED BEWILDERS US ?” என்று சொல்ல, இவர்… “முருகா” என்று அலறியே விட்டார்.

முந்தைய தினம், அவர் தோழி ஒருவர் வந்து *‘வேல்மாறல்’* என்ற ஸ்லோகத்தை படிக்க சொல்லிச் சென்றதும், அதில் ஒரு குறிப்பிட்ட அடியை இவர் திரும்ப திரும்ப சொல்லி வந்ததையும் கூறினார்.

அந்த மருத்துவர் மிகவும் நல்லவர்… பக்திமான் போல. அனைவருக்கும் இந்த பயன் போய் சேரட்டும் என்று இதய நோய் பிரிவில் இருக்கும் அனைவருக்கும் *‘வேல்மாறல்’* புத்தகத்தை மறுநாள் வரவழைத்து கொடுத்தார்.

பலர் வியக்கத்தக்க அளவில் குணமடைந்து வீடு திரும்பினர்.

*அதெப்படி ‘வேல்மாறல்’ ஸ்லோகமும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட வரிகளும் இந்த அற்புதத்தை நிகழ்த்தியது*?

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது குடித்(து) உடையும்
உடைப்(பு)அடைய அடைத்(து) உதிரம் நிறைத்து விளையாடும்

மேற்படி வரிகளை திரும்ப திரும்ப படியுங்கள்.

திரைக்கடலை … அலைகள் வீசும் கடலை
உடைத்து … பிளந்து, உடையும் … உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
உடைப்பை அடைய அடைத்து … உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
நிறை புனர் கடிது குடித்து … சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
உதிரம் நிறைத்து விளையாடும் … வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப்
பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் குகன் வேலே. 🙏


Thursday, September 6, 2018


இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

www.supremeholisticinstitute.com