Wednesday, July 20, 2011

ஆவாரை - Cassia auriculata BY Dr.VS.Suresh Phd .,

ஆவாரை - Cassia auriculata
BY Dr.VS.Suresh Phd .,  Cell :9884380229


ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ !
இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .

இது ஒரு காய கலப்ப மூலிகை .


மதிப்புத்தேரியாமல் சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது.  இதன் அனைத்து பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. அதன் வேர் இலைகள் ,பூ ,கிளைகள் ,காய்கள் அனைத்தையும் சேர்த்து ஆவாரை பஞ்சக சூரணம் தயாரித்து அதை தொடர்ந்து உபயோகித்தால் சர்க்கரை வியாதி குணமாகிறது.ö

இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் .
இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் .இதனுடன் நாகப்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .

உடலில் தேய்த்து குளித்தால் சிலர் மேனியில் வரும் மேனி வாடை போய் விடும் .
சிறந்த தோல் காப்பான் .தொடர்ந்து பூசி குளித்து  வர உடல் தங்கம் போல் ஆகும் .
இது ஒரு மொத்த  மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும்,.
நமது உடலில் இருக்கும் பல மில்லியன் செல்களிலும் சேரும் கழிவுகளை நீக்க முடியாமல் போகும் போதுதான் வியாதிகள் வருகின்றன என்பது நமது கிழை  நாட்டு வைத்திய தத்துவும் .

அந்த செல்களில் இருக்கும் ப்ரீ ராடிகால்சை நீக்க நமது பல மூலிகைகள் உதவுகின்றன ..
இது வெற்றியடைந்தால் செல்களுக்கு அழிவில்லை .பின் என்றும் இளமைதான் .
இவைகளையே காயகல்ப்ப மூளிகள் என நமது சித்தர்கள் கூறுகிறார்கள் .எனவே அவர்கள் கூறும் காயபலப்ப மூலிகைகளை மட்டுமாவது தொடர்ந்து எதோ ஒரு தகுந்த முறையில் உபயோகித்தால் நாம் முதுமையை வென்று ,நோயின் பிடியில் இருந்து தப்பி வாழலாம் .
மண்ணில் நல்ல வண்ணம் காணலாம்.

நமது வீட்டில் கழிவு நீரில் அடைப்பு ஏற்ப்பட்டு ஓடாமல் நின்றால் வீடு என்ன கதியாகும் .அதே கதிதான் செல்களில் நீக்க வேண்டிய பகுதி நீக்கப்படாவிட்டால் நடக்கிறது .
இது குறித்த ஒரு ஆராச்சியின் முடிவுகள் இதோ !

1) Cassia auriculata , commonly known as “Tanner's cassia,”  ( ஆவாரை ) is widely used in Indian folk medicine for the treatment of diabetes mellitus. Oral administration of 0.45 g/kg body weight of the aqueous extract of the flower for 30 days resulted in a significant reduction in blood glucose and an increase in plasma insulin, but in the case of 0.15 and 0.30 g/kg, was not significant. The aqueous extract also resulted in decreased free radical formation in tissues studied. Thus, this study shows that Cassia auriculata flower extract (CFEt) has hypoglycemic action. The decrease in lipid peroxides and increase in reduced glutathione (GSH), superoxide dismutase (SOD), catalase (CAT), glutathione peroxidase (GPx) and glutathione S -transferase (GST) clearly show the antioxidant properties of CFEt. The effect of CFEt was most prominently seen in the case of animals given 0.45 g/kg body weight. CFEt was more effective than glibenclamide.

2)The ethanol extract of the roots of Cassia auriculata was studied for its nephroprotective activity in cisplatin- and gentamicin-induced renal injury in male albino rats. In the cisplatin model, the extract at doses of 300 and 600 mg/kg body wt. reduced elevated blood urea and serum creatinine and normalized the histopathological changes in the curative regimen. In the gentamicin model, the ethanol extract at a dose of 600 mg/kg body wt. reduced blood urea and serum creatinine effectively in both the curative and the preventive regimen

மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?

இது சருமவியாதி , மூகத்தினால் வரும் வியாதிகள் அனைத்தயும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது .

ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம்.

இதன் பூவை இனிப்புடன் கிளறி ஹாலவா செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும் .

இனி சாலை வழியே போகும் போது ஆவரையை கண்டால் விடாதீர்கள் .பூக்களை சேகரம் செய்து உபயோகியுங்கள் .இனி வரும் மழை காலத்தில் தான் மிகுதியாக கிடைக்கும் .
இது ஒரு வியாபர பயிராகவே பயிர் செய்து அதன் ethanol extract  செய்து விற்றால் ,வாங்க  உலகம் காத்திருக்கிறது .

3 comments:

  1. Hi sir
    I am Mani from Salem .I am more interested on herbal cultivation and extract business .in which Cassia auriculata.please help me sir

    ReplyDelete